News February 24, 2026

BREAKING: காஞ்சிபுரத்தில் கலெக்டர் மாற்றம்!

image

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று(பிப்.24) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், பொருளியல், புள்ளியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News March 1, 2026

உத்திரமேரூரில் போட்டியிட எம்.எல்.ஏ சுந்தர் மனு

image

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது . இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விருப்பமனுக்கள பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது எம்எல்ஏ ஆக உள்ள சுந்தர், மீண்டும் போட்டியிட திமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று விருப்பமான தாக்கல் செய்துள்ளார்.

News March 1, 2026

காஞ்சிபுரத்தில் மனைவியை தாக்கியவர் கைது!

image

சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(45). ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி சுகந்தி(38). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்த பழனி, மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில், பழனியை போலீசார் கைது செய்தனர்.

News March 1, 2026

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

படப்பை அடுத்த சாலமங்கலம் , முருகன் தெருவைச் சேர்ந்தவர் அம்மாயி(65). இவர் சாலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூய்மைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(பிப்.28) படப்பை மேம்பாலம் கீழ் நடந்து வரும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அம்மாயி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!