News February 24, 2026
நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். இந்நிலையில் முதல்வரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 25, 2026
நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News February 25, 2026
நெல்லையில் சிறுமியை கடத்திய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் கொடுமை செய்த வழக்கு சேரன்மாதேவி காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தது. இதில் சுமேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று மகிளா நீதிமன்றம் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் சிறுமிக்கு நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்
News February 25, 2026
நெல்லை: மாமியார் கொலையில் பகீர் தகவல்!

மானூர் அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் (90) என்பவரை அவரது மருமகள் வசந்தா கொடூரமாக கொலை செய்தார். அவரை போலீஸ் கைது செய்த நிலையில், வெள்ளையம்மாள் சம்பந்தமே இல்லாமல் திட்டுவார். வீட்டுக்கு வர நேரமாகிவிட்டால் சந்தேகப்பட்டு பேசுவார். நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


