News February 24, 2026
மாணவர்களிடையே சாதிய வெறிக்கு யார் பொறுப்பு? EPS

தூத்துக்குடி, முதலூரில் 11-ம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் சாதிவெறி கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடந்து 4 நாள்களாகியும் இதுவரை வழக்கு பதியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களிடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 28, 2026
₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்கும் அரசு

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 28, 2026
ஈரானை நிர்மூலமாக்குவோம்: டிரம்ப்

ஈரானிய ஆட்சியிடமிருந்து US மக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் நோக்கம் என டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுத வலிமை பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்ற அவர், அந்நாட்டின் ஏவுகணைகள், கடற்படை உள்ளிட்ட அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் No.1 நாடான ஈரான் அணுஆயுதங்கள் வைத்திருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
CINEMA ROUNDUP: ஜாக்பாட் அடித்த ‘தாய் கிழவி’

ராதிகாவின் ‘தாய் கிழவி’ படம் முதல் நாளில் ₹2.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது *யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் நீளம் கொண்டது என தகவல் வெளிவந்துள்ளது *மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘LIK’ ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் *மறைந்த நடிகை செளந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை உள்ளதாக பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.


