News February 24, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

செண்பகத்தோப்பு ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திரபாண்டியன் – மதுபாலா தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரபாண்டியன் கூமாபட்டியில் வசித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி மனைவியை பார்த்துவிட்டு வந்து சுரேந்திரபாண்டியன் விஷம் குதித்துள்ளார். உடனடியாக ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News February 27, 2026

விருதுநகர்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

விருதுநகர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 27, 2026

விருதுநகர்: ரூ.181 கோடியில் சாலை – அமைச்சர்

image

விருதுநகரில் ரூ.12.43 கோடி மதிப்பில் அரசு அருங்காட்சியகத்தை நேற்று முதல்வர் காணொலியில் திறந்தார்; தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.181 கோடியில் சிவகாசி – விருதுநகர், அழகாபுரி – விருதுநகர் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த பணிகள் தொடங்கின. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.

News February 27, 2026

ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

ராஜபாளையம் ராம் நகர் இமானுவேல் (61) தென்காசி சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து 70 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. இதனை விசாரித்த ராஜபாளையம் வடக்கு போலீசார் மதுரை காளவாசல் மகேந்திரன் (34), எரியோடை சாமுவேல் (23), அருண்பாண்டியன் (29) ஆகியோரை கைது செய்தனர். மூவரும் மதுரை மத்திய சிறையில் பழகி, பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

error: Content is protected !!