News February 24, 2026
விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

செண்பகத்தோப்பு ராம்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேந்திரபாண்டியன் – மதுபாலா தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரபாண்டியன் கூமாபட்டியில் வசித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி மனைவியை பார்த்துவிட்டு வந்து சுரேந்திரபாண்டியன் விஷம் குதித்துள்ளார். உடனடியாக ஶ்ரீவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News February 26, 2026
விருதுநகர்: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 ஆம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம்
04562-252388 தெரிவியுங்க… இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News February 26, 2026
சிவகாசி: வீடு புகுந்து மாணவியிடம் அத்துமீறல்

சிவகாசி பகுதியில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற செல்வகுமார் (30) கைது செய்யப்பட்டார். எம்.எஸ்சி முதல் ஆண்டு படிக்கும் 22 வயது மாணவி தாயாருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் வீட்டில் அத்துமீறி நுழைந்தார். மாணவி எதிர்த்து தள்ளியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மாணவி சத்தம் போட்டதால் அவர் தப்பியோடினார். புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
News February 26, 2026
புதிதாக 7 ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 துணை சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். குறிப்பாக வீரசோழனில் சுமார் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டையில் ரூ.60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கே புதூரில் ரூ.45 லட்சம் மதிப்பில் சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.


