News February 24, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 240-ல், வருகிற பிப்ரவரி 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். SHAREIT
Similar News
News March 1, 2026
திமுகவில் இணைந்தார்

திருப்பூர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாவட்டச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமார், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கட்சித் தலைவருக்குப் பூங்கொத்து வழங்கித் தன்னை இணைத்துக் கொண்ட அவரோடு, முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். இம்மாற்றம் திருப்பூர் மாவட்ட அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
News February 28, 2026
திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்ளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!
News February 28, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 28.02.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், காவல் துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவி 108 அழைக்கவும்.


