News February 24, 2026
ஹெலிகாப்டர் விபத்தில் 15 பேர் பலி

பெருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ விமானம் கிழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. Arequipa பகுதியில் நடந்த இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை.
Similar News
News February 28, 2026
கூட்டணி அறிவிப்பு எப்போது? ஜி.கே.மணி

கூட்டணி குறித்த முடிவை 28-ம் தேதிக்குள் அறிவிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். பாமக பிளவுபட்டுள்ளதால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 28, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு மார்ச் 2 உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News February 28, 2026
மதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை: மல்லை சத்யா

மதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். வரும் தேர்தலில்<<19262086>> திமுகவுக்கு ஆதரவு<<>> அளிப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்வோம் என்றும், இதில் எந்த நெருடலும் இல்லை எனவும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.


