News February 24, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி.23) இரவு 10 மணி முதல் இன்று (பிப்ரவரி.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!
Similar News
News February 27, 2026
கிருஷ்ணகிரி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News February 27, 2026
ஓசூர்: சசிகலாவை விளாசிய கே.பி.முனு சாமி!

ஓசூரில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனு சாமி பேசியதாவது, ”அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா. கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்த ஒரு குடும்பம். இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார்.
News February 27, 2026
கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

அஞ்செட்டியைச் சேர்ந்த பெரியநாயகம் (40), இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாகப் புகார் எழுந்தது. குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடலில் கடுமையான உள்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று (பிப். 26) பெரியநாயகத்தைப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அஞ்செட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


