News February 23, 2026

நெல்லை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 25, 2026

நெல்லை: மாமியார் கொலையில் பகீர் தகவல்!

image

மானூர் அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் (90) என்பவரை அவரது மருமகள் வசந்தா கொடூரமாக கொலை செய்தார். அவரை போலீஸ் கைது செய்த நிலையில், வெள்ளையம்மாள் சம்பந்தமே இல்லாமல் திட்டுவார். வீட்டுக்கு வர நேரமாகிவிட்டால் சந்தேகப்பட்டு பேசுவார். நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

News February 25, 2026

நெல்லை: ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். SHARE IT

News February 25, 2026

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நீட்டிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் மன வளர்ச்சி புத்தி கூர்மைக்கு உரிய சத்தான வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாவட்ட மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை சார்பில் நடைறுகிறது. வருகிற 28ஆம் தேதி வரை இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!