News February 23, 2026

தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 24, 2026

தென்காசி: NO EXAM.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

News February 24, 2026

தென்காசி: உடும்பு வேட்டையில் ஈடுபட்டவர் கைது

image

தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் உடும்பு வேட்டை நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனத்துறையினர் சோதனைகள் மேற்கொண்டதில் ஐந்தாம்கட்டளை பகுதியை சார்ந்த காசி என்பவர் உடும்பு வேட்டையாடியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

News February 24, 2026

தென்காசி: பைக் மோதி விவசாயி பலி

image

கடையநல்லூர்-முத்துசாமிபுரத்தை சேர்ந்த விவசாயியான உடையார் சாமி நேற்று முன் தினம் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது திரிகூடபுரம் நோக்கி சென்ற பைக் இவரது மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடையநல்லூர் GH-ல் சேர்க்கப்பட்டார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சுகைல் என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!