News February 23, 2026
குளித்தலை அருகே 4 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சிந்தாமணிப்பட்டி, நங்கவரம், மாயனூர், தோகைமலை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முருகேசன் (40), சந்திரன் (52), ராஜேந்திரன் (49), அமர்நாத் (21) ஆகிய 4 பேர் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 107 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News February 25, 2026
கரூரில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News February 25, 2026
கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கரூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News February 25, 2026
கரூர்: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.
வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!


