News February 23, 2026

BREAKING: தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த கலெக்டர்…!

image

கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194வது அவதாரத் திருவிழாவையொட்டி தென்காசியில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மார்ச்.8ம் தேதி பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு. தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News February 24, 2026

கோவிந்தபேரி பகுதியில் அவசர மின்தடை அறிவிப்பு

image

கடையம் பிரிவிற்குட்பட்ட கோவிந்தபேரி அருகே சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிகள் இன்று (பிப்ரவரி 24) நடக்கிறது. இதனால் காலை 09:30 மணி முதல் 02:00 மணி வரை பிள்ளை குளம், மந்தியூர் மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம், கோவிந்த பேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 24, 2026

தென்காசி: NO EXAM.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

News February 24, 2026

தென்காசி: உடும்பு வேட்டையில் ஈடுபட்டவர் கைது

image

தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் உடும்பு வேட்டை நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனத்துறையினர் சோதனைகள் மேற்கொண்டதில் ஐந்தாம்கட்டளை பகுதியை சார்ந்த காசி என்பவர் உடும்பு வேட்டையாடியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!