News February 23, 2026
JUST IN: தருமபுரி கலெக்டர் வெளியிட்டார்!

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று(பிப்.23) மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வெளியிட்டார். அதுபடி,, தருமபுரியில்-2,57,939, பாலக்கோடு-2,37,476 , பென்னாகரம்-2,46,293, பாப்பிரெட்டிப்பட்டி-2,54,658 அரூர் -2,43,742 என ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள <<19214862>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!
Similar News
News February 26, 2026
தருமபுரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில், ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையைச் சோதனை செய்ததில் 12 கிலோ கஞ்சா சிக்கியது. போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் பையைப் போட்டுவிட்டுத் தப்பியோடியது தெரிந்தது. இதுகுறித்து தருமபுரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 26, 2026
தருமபுரி அருகே மொபட் மோதி டிரைவர் பலி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பளிஞ்சரஅள்ளியைச் சேர்ந்த முருகன் (50) என்ற டிரைவர், மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்றபோது மொபட் மோதி பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 26, 2026
தருமபுரி: பெண்ணுக்கு கொலை மிரட்டல் – போலீஸ் வலைவீச்சு

தருமபுரி, மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன். இவரது மனைவி அம்சா நேற்று(பிப்.24) இரவு வினோத்குமார் முரளிதாஸ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அம்சாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது குறித்து அம்சா மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து வினோத் குமார், முரளி தாஸ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


