News February 23, 2026
BREAKING திருநெல்வேலி: ஒருவர் வெட்டி படுகொலை

நெல்லை மாவட்டம், ஆணைப்பரம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் இட்டேரி அருகே இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகாத உறவு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களான மணிகண்டன் சுடலைமுத்து ஆகிய 2 பேர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 27, 2026
நெல்லை திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

நெல்லை மாநகராட்சி முன்னாள் மாவட்ட உறுப்பினரும், மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகியுமான தவுலத் நேற்று மாலை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். புதிதாக கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட உறுப்பினரை எம்எல்ஏ அப்துல் வகாப் வரவேற்றார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News February 27, 2026
திருநெல்வேலி: 2 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணம் தொடர்பான தகராறில், ரவுடி பேச்சிமுத்து (37) உள்ளிட்டோர் அரிவாளால் ஊழியர் சந்திரன் (49) மற்றும் டிரைவர் தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை வெட்டிவிட்டு தப்பினர். பெருமாள்புரம் போலீஸ் நிலையம் விசாரணையில் பேச்சிமுத்து மீது முன்கூட்டியே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News February 27, 2026
நெல்லையப்பர் கோயிலில் அனுமதி இல்லை – காரணம் இதோ!

வரும் மார்ச்.3ம் தேதி சந்திர கிரகணம் நடக்கிறது. அன்று மாலை 3.08 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி காலை 6.48 மணிக்கு நிறைவு பெறுகிறது. நெல்லையப்பர் கோயிலில் அன்று காலை பூஜைகள் நடந்த பின்னர் மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.


