News February 23, 2026
புதிய ரேஷன் கார்டுகள்.. அரசின் மகிழ்ச்சி செய்தி

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் Smart Card வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 2025 டிச. மாதத்திற்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு Smart Card அச்சிடும் பணிகள் 90% நிறைவடைந்ததாகவும், ஒரிரு நாள்களில் தாலுகா அலுவலகங்களுக்கு அவை சென்று சேரும் என்றும் கூறப்படுகிறது. TN முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News February 27, 2026
பிஹாரில் தமிழர்கள் சென்ற பஸ் விபத்து… 20 பேர் காயம்

காசி யாத்திரைக்காக 20-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. பிஹாரின் கயா பகுதியில் பேருந்து சென்ற போது வேண்டுமென்றே டிரக் ஒன்று இடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் பலியான நிலையில், படுகாயம் அடைந்த பலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News February 27, 2026
சற்றுமுன்: ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி

OPS மற்றும் அவருடைய ஆதரவாளர் ஐயப்பன் திமுகவில் இணைந்ததையடுத்து, தங்களது MLA பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுகவின் துணை கொறடா ரவி கடிதம் அளித்துள்ளார். அதில், ராஜினாமா செய்வதற்கு முன்பே திமுகவில் இணைந்துவிட்டதால், பேரவை விதிகளின்படி இருவரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News February 27, 2026
திருமணம் முடிந்த உடன் விஜய்-ரஷ்மிகா செய்த முதல் வேலை

புதுமணத் தம்பதிகளான விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா PM மோடியை சந்தித்துள்ளனர். இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளுமாறு PM மோடி & அமித்ஷாவுக்கு அவர்கள் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். முன்னதாக உதய்பூரில் நடந்த இவர்களின் திருமணத்திற்கும் PM அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


