News February 23, 2026

பாம்பன் மீனவர்கள் 12 பேர் கைது

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேரை தனுஷ்கோடி தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 28, 2026

இராம்நாடு: நாயை ஏவி கடிக்க விட்டவருக்கு நூதன தண்டனை

image

ராமநாதபுரம், நாகாச்சியை சேர்ந்த மணிகண்டன் கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. விசாரணைக்கு அழைக்க சென்ற சாயல்குடி வனத்துறை அதிகாரிகள் மீது அவர் தனது வளர்ப்பு நாயை ஏவினார். காயமடைந்த அதிகாரியின் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது. GH-ல் 30 நாள் நாய்க்கடி பிரிவில் பணியாற்ற நிபந்தனை ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

News February 27, 2026

கச்சதீவு செல்பவர்களை வழி அனுப்பி வைத்த ஆட்சியர்

image

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள், படகு மூலம் பாதுகாப்பாக செல்வதை இன்று (பிப்.27) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு வாழ்த்தி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில் தம்பி, இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மீரா ஐபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 27, 2026

ராம்நாடு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் – APPLY…!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!