News February 23, 2026
கள்ளக்குறிச்சியில் திக்குமுக்காடும் மக்கள்!

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பகுதியில், சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆனால், 2 பேருந்து நிலையங்களுக்கும் இடையே டவுன் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என மக்கள் புலம்புகின்றனர். இதனால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளவதால், டவுன் பஸ்கள் பழைய பேருந்து நிலையம் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News March 5, 2026
தியாகதுருகம்: மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த குடியநல்லூரில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதில் பணியாற்றி வரும் பாபு என்கிற ஆசிரியர் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரை மணாலன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ஆசிரியர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
News March 4, 2026
கள்ளக்குறிச்சி: திருமண தடையா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


