News February 23, 2026
தி.மலை: மகள் கண்முன்னே பெற்றோர்கள் பலி

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் அப்பாண்டைராஜன் (49). இவரது மனைவி ஜீவிதா (41) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மகள் திவ்யஸ்ரீ (16) +2 படித்து வருகிறார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் 3 பெரும் பைக்கில் வந்தபோது எதிரே வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மகள் கண்முன்னே பெற்றோர்கள் உயிரிழந்தனர்.
Similar News
News March 11, 2026
தி.மலை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தி.மலையில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் பகுதியில் திமுக சார்பாக பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று, திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
News March 11, 2026
வந்தவாசி அருகே விஷம் குடித்து தற்கொலை!

தி.மலை: வந்தவாசி அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(49). விவசாயியான இவர், கடந்த மார்ச் 3ஆம் தேதி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த கோபால், பூச்சி மருந்தை குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


