News February 23, 2026
தேனி: குடும்பத் தகராறில் இளைஞர் தற்கொலை

குரங்கணி அருகே நரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (23). நேற்று முன்தினம் இவருக்கும், இவரது அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நந்தகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்கு (பிப்.21) பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 28, 2026
தேனி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

தேனி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT
News February 28, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்..

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News February 28, 2026
தேனி: திமுகவில் OPS-க்கு முக்கிய பதவியா?

முன்னாள் முதல்வர் OPS அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் OPS-க்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


