News February 23, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 போலீஸ் SI இடமாற்றம்

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றி வரும் SI-க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராஜாக்கமங்கலம் ஜான் போஸ்கோ, தக்கலை ஆண்டோ கெவின், நேசமணி நகர் விஜயன், கன்னியாகுமரி வினிஷ்பாபு, ஆசாரிப்பள்ளம் சத்திய சோபன், ராஜன் உட்பட 60 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
Similar News
News February 24, 2026
குமரியில் டிரோன்கள் பறக்க தடை

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும், நாளையும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்க விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 24, 2026
குமரி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி APPLY

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
News February 24, 2026
குமரி: கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (21). பட்டதாரியான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில் வேலை பிடிக்காமல் 1மாதத்திற்கு முன் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பெண்ணை காதலித்த அவர் திருமணம் செய்ய சம்மதம் கேட்டதற்கு பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் அந்த பெண்ணிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு


