News February 23, 2026
கள்ளக்குறிச்சி: தந்தைக்கு எமனாக மாறிய மகன்!

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவராஜ் மது அருந்திவிட்டு வந்து விஷ்வாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தேவராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரில் மறைந்திருந்த விஷ்வாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 24, 2026
உளுந்தூர்பேட்டையில் அதிபயங்கர விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. மடப்பட்டு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த நெல் அறுவை இயந்திரத்தின் மீது, பின்னால் வந்த ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் தாக்கத்தால் நெல் அறுவை இயந்திரம் சாலையின் நடுவே கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 24, 2026
கள்ளக்குறிச்சி: 7 மாத குழந்தையை கொன்ற தாய்!

கள்ளக்குறிச்சி: கொட்டமேடைச் சேர்ந்தவர் சந்திரலேகா (19). இவருடைய கணவர் செல்லப்பாண்டியன் (26). இவர்களுக்கு 7 மாத பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், செல்லப்பாண்டியனுடன் போனில் பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், சந்திரலேகா குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தை உயிரிழந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
News February 24, 2026
கள்ளக்குறிச்சி: போதையில் ஒருவர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி:நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சத்தியா. செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி செந்தில்குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


