News February 23, 2026
கள்ளக்குறிச்சி: தந்தைக்கு எமனாக மாறிய மகன்!

சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). இவரது மகன் விஷ்வா (22). கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவராஜ் மது அருந்திவிட்டு வந்து விஷ்வாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கத்தியால் தலையில் வெட்டி விட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தேவராஜ், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரில் மறைந்திருந்த விஷ்வாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 9, 2026
சின்னசேலம் அருகே சோகம் – தொழிலாளி பலி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் வினைதீர்த்தான் (41). இவர் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வயலில் இருந்த கரும்பை வெட்டி லாரியில் ஏற்றி சென்ற போது லாரியில் மின் கம்பி பட்டு லாரியிலிருந்த வினைதீர்த்தான் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 9, 2026
சின்னசேலம் அருகே சோகம் – தொழிலாளி பலி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் வினைதீர்த்தான் (41). இவர் பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வயலில் இருந்த கரும்பை வெட்டி லாரியில் ஏற்றி சென்ற போது லாரியில் மின் கம்பி பட்டு லாரியிலிருந்த வினைதீர்த்தான் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 8, 2026
FLASH: கள்ளக்குறிச்சி மக்களுக்கு CM வாக்குறுதி!

கள்ளக்குறிச்சி மற்றும் தி.மலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் மரவேலைப்பாடு குழுமம் அமைக்கப்படும் என வாக்குறுதி அறிவித்துள்ளார். இது குறித்து உங்க கருத்தை கமெண்ட்டில் சொல்லிட்டு போங்க மக்களே!


