News February 23, 2026
புதுவையில் இளம்பெண் மாயம் – போலீசார் விசாரணை

புதுவை கரிக்கலாம்பாக்கம் கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகள் ராகவி (24), வில்லியனுாரில் உள்ள துணிக் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக் கம்போல் தணிகாசலம் தனது மகளை வில்லியனுாரில் வேலை செய்யும் துணிக்கடை பகுதியில் இறக்கிவிட்டு சென்றார். வேலைக்கு சென்ற ராகவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
Similar News
News February 27, 2026
புதுச்சேரி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 27, 2026
புதுச்சேரி: மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.500

புதுச்சேரி மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இதுவரை வழங்கப்பட்டு வந்த புத்தகப்பை மற்றும் காலணிக்குப் பதிலாக, ஆண்டு தோறும் ரூ.500 தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
News February 27, 2026
புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


