News February 23, 2026
மாட்டுத்தாவணி: பிரியாணி கடையில் தூக்கிட்டு தற்கொலை

நேபாளம், ஜனக்பூரை சேர்ந்தவர் நாகேந்திர சஹானி மகன் சுதிர் சஹானி(21). இவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மதுரை பெண் ஒருவரை காதலித்ததை அறிந்த சஹானியின் பெற்றோர் அதனை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தான் வேலை பாத்த பிரியாணி கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 27, 2026
மதுரையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மதுரை ரிசர்வ் லயனை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் வீட்டில் வழுக்கி
விழுந்ததில் இடுப்பில் அடிபட்டது. முதுமை காரணமாக அவருக்கு ஆபரேஷன் செய்ய
முடியவில்லை. இந்த நிலையில் வலி தாங்க முடியாமல் வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி நேற்று தீக்குளித்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மூதாட்டி தமிழ்செல்வி உயிரிழந்தார். இதுக்குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 27, 2026
மதுரை: சிறுவன் மர்மமான முறையில் மரணம்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மங்கி லால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை சர்வேயர் காலையில் தங்கி இருந்து பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சோட்டாராம்(16) கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இந்நிலையில் சாத்தையார் ஓடை வடகரை அருகே ஓட்டு வீட்டில் சிறுவன் தூக்கில் பிணமாக கிடப்பதாக கே.புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று உடலை கைப்பற்றி மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.
News February 27, 2026
மதுரை சிறையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம்

மதுரை சிறையில் அட்டை தயாரிப்பு பிரிவு அருகே கருப்பு டேப் சுற்றிய பந்து கண்டுபிடிக்கப்பட்டது. காவலர் பாலசங்கர் திறந்ததில் 85 கிராம் கஞ்சா, பெயர் தெரியாத 26 மாத்திரைகள், சிறிதளவு புகையிலை இருந்தது. இதுவரை அதிகபட்சம் 25 கிராம் மட்டுமே வீசப்பட்ட நிலையில், முதல்முறையாக அதிகளவு மற்றும் மாத்திரைகள் வீசப்பட்டதால், வெளியில் இருந்து எறியப்பட்டதாக சந்தேகித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


