News February 23, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணி செல்லும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 26, 2026
திருவள்ளூர் அருகே பயங்கர தீ விபத்து!

திருவள்ளூர்: தேர்வாய் கண்டிகை, சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் இன்று(பிப்.26) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாண்டியன் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
News February 26, 2026
திருவள்ளூரில் ஒருவர் அதிரடி கைது!

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று(பிப்.25)
பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த யுவராஜ், மற்றும் மணவாளநகரைச் சேர்ந்த முரளி என்பவரிடம் பிரேசில் நாட்டு பணத்தை மாற்ற வந்ததும் தெரிந்தது. அவரைப் போலீசார் கைது செய்தனர்.
News February 26, 2026
பள்ளிப்பட்டு அருகே பைக் மோதி ஒருவர் பலி

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அடுத்த கரலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா(60). இவர், நேற்று(பிப்.25) அவரது வீட்டிற்கு எதிரே உள்ள மாட்டு கொட்டகைக்கு, சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், சந்திரய்யா படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


