News February 22, 2026

திருப்பத்தூர் : பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

Similar News

News February 25, 2026

BREAKING: திருப்பத்தூரில் வெடிகுண்டு மிரட்டல்

image

திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு இன்று (25.02.2026) வெடிகுண்டு வைத்திருப்பதாக, மெயில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News February 25, 2026

திருப்பத்தூர்: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும். நகரங்களுக்கு ரூ.96,000க்கு குறைவாக இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் போதும். வேறு எதுவும் தேவையில்லை. ஆவணங்கள் சரியாக இருந்தால் 1 குழந்தைக்கு மாதம் ரூ.4,000, 2 குழந்தைகளுக்கு ரூ.8,000 வழங்கப்படும். ஷேர் செய்யுங்கள்.

News February 25, 2026

ஆம்பூரில் கொடூரம்; சரமாரி அரிவாள் வெட்டு!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பொன் நகரம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி கோபி (40). இவரது மச்சான் தமிழ் செல்வன் (27). இந்நிலையில், இருவருக்கும் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு குடிபோதையில் கோபியை தமிழ்ச்செல்வன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்தேன் கோபி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!