News May 12, 2024
திமுக அரசு அலட்சியமாக இருக்கிறது: பி.ஆர்.பாண்டியன்

டெல்டாவில் ஒருபோக சாகுபடிக்குக்கூட தண்ணீர் இல்லாமல் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பதாகக் கூறிய அவர், காவிரியின் உரிமையைப் பெற தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
விரைவில் ‘ஏஜெண்ட் டீனா’: லோகேஷ்

‘விக்ரம்’ படத்தில் கமல் கதாபாத்திரம் மட்டுமில்லாமல் பல கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று தான் ‘ஏஜெண்ட் டீனா’. தற்போது இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெப்தொடர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இத்தொடரை வேறு ஒருவர் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News August 5, 2025
விஜய் UPSET.. தவெகவில் குழப்பம்

புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கொடுத்த பூத் கமிட்டி லிஸ்ட்டில் 25,000 போலியானவை என தெரியவந்ததே இதற்கு காரணமாம். மாவட்டச் செயலாளர்கள் கொடுத்ததைத்தான் தங்களிடம் கொடுத்ததாக விஜய்யிடம் அவர் சமாளித்திருக்கிறார். மேலும், மாவட்டச் செயலாளர்களிடமும் ஏன் இப்படி செய்தீர்கள் என புஸ்ஸி ஆதங்கப்பட்டாராம். இது தவெகவில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
News August 5, 2025
அனல் பறக்கும் THE HUNDRED TOURNAMENT..!

ஐபிஎல் போன்று இங்கிலாந்தில் நடைபெறும் 100 பால் தொடர் இன்று முதல் துவங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 34 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறுகின்றன. ஸ்டீவ் ஸ்மித், கிளாஸன், டேவிட் வார்னர் போன்ற பல உலகத்தர வாய்ந்த வீரர்கள் இத்தொடரில் விளையாடவுள்ளதால் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.