News February 22, 2026
பண்ருட்டி: சிறுமியை கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவாவும் (25) காதலித்து வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அந்த சிறுமியுடன் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் சிவா மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 22, 2026
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News February 22, 2026
கடலூர்: இயல்பை விட அதிகம் பெய்த மழை!

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 22ஆம் தேதி வரை இயல்பாக 36.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 0.5 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.22) அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று வரையிலும் இதே அளவு மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
News February 22, 2026
விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை; ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டையினை வருகிற பிப்.26ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரையில் பெறாதவர்கள் அருகில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


