News February 22, 2026
குமரி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே மேலதாராவிளையை சேர்ந்த சிவசுடலைமணி (28) பெயிண்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News March 1, 2026
மண்டைக்காடு: மூன்று இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தர இருப்பதையொட்டி நடு ஊர் கரை, வெட்டுமடை, புதூர் ஆகிய இடங்களில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. 6 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், வேன் ஆகியவை லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
குமரி: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <
News February 28, 2026
குமரியில் 800 போலீசார் குவிப்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்காக 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களான பார்க்கிங் பகுதிகள், மக்கள் கூடும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் சுமார் 150 சிசி டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனைக் கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.


