News February 22, 2026
பள்ளிப்பாளையம் அருகே தாக்குதல் சம்பவம்: இருவர் கைது!

பள்ளிப்பாளையம் சின்னாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் செல்வம் மற்றும் பழனியப்பனை, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் தகராறு காரணமாகச் சரமாரியாகத் தாக்கினர். காயமடைந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News February 25, 2026
நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல்லில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News February 25, 2026
நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 25, 2026
நாமக்கல்லில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயுநுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாளை 26.02.2026 வியாழன் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற உள்ளது.


