News February 22, 2026
செங்கல்பட்டில் உடல் தூக்கிவீசப்பட்டு பலி

கும்பகோணத்தை சேர்ந்தவர் அனுசுயா (வயது 23). இவர் ராஜதுரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். அனுசுயா கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், செங்கல்பட்டு- கடற்கரை செல்லும் ரயில் முன் பாய்ந்து உடல் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 26, 2026
செங்கல்பட்டு: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 26, 2026
செங்கல்பட்டு: திண்டாடும் மக்கள்!

சென்னை பீச்–தாம்பரம்–செங்கல்பட்டு மின்ரயில் சேவை குறைவால் ஆறாவது நாளாக பயணிகள் கடும் சிரமம் அனுபவிக்கின்றனர். பலர் தனியார் வாகனங்கள், பேருந்துகள், மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எக்ஸ்னோரா அமைப்பு, பணிகள் முடியும் வரை ₹10 கட்டணத்தில் 500 ஒம்னிபஸ்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. நெரிசல் மற்றும் தாமதம் காரணமாக அலுவலக பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News February 26, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

சிங்கப்பெருமாள் கோவில் காந்தி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (63), இவர் லையை கடக்க முயன்றுள்ளார் அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் முதியவர் ராமகிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


