News February 22, 2026
ஊட்டியில் தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை!

ஊட்டியில் தாயைப் பிரிந்து தந்தையுடன் வளர்ந்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான தந்தையைத் தேடி வரும் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 1, 2026
நீலகிரி வனக்கோட்டம்: புதிய மாவட்ட வன அலுவலர் பதவி ஏற்பு!

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த கௌதம்பணிமாறுதல் பெற்றதை அடுத்து, இன்று காஷ்யப் ஷசாங் ரவி புதிய மாவட்ட வன அலுவலராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து, வன பாதுகாப்பு, வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் – வனத்துறை இடையேயான ஒருங்கிணைப்பு பணிகள் இனி வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
News February 28, 2026
நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நீலகிரி மாவட்ட மக்களே, முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News February 28, 2026
நீலகிரி: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


