News February 22, 2026
ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

இரவு 8 – 11.30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!
Similar News
News March 9, 2026
பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். ➤ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ➤லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். ➤பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it.
News March 9, 2026
சீக்கிரம் தேர்தலை நடத்துங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன்

த்ரிஷா சர்ச்சைக்கு பின்னும் விஜய்க்கான ஆதரவு குறையவில்லை என கூறப்படும் நிலையில், சீக்கிரம் தேர்தலை வச்சி முடிங்க, இந்த Opinion Poll தொல்லை தாங்க முடியலே என ECI-க்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Opinion Poll-ஐ Twitter-ல போட்டு நம்மள confuse பண்றாங்க; ஜனங்க நிம்மதியா, அவங்க இஷ்டப்படி ஓட்டு போட விடுங்கப்பா எனவும் கூறியுள்ளார்.
News March 9, 2026
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.


