News May 12, 2024
360 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில், 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும், 24 பேரிடம் எந்த சொத்தும் இல்லை எனவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர். அவர்களில் 11 பேர் மீது கொலை வழக்கும், 5 பேர் மீது பாலியல் வழக்குகளும் பதிவாகியுள்ள நிலையில், 17 பேர் பல வழக்குகளில் தண்டனையும் பெற்றுள்ளனர்.
Similar News
News September 18, 2025
21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
பாண்டியர் கோட்டை புகும் சோழ இளவல்?

சங்க கால தமிழ், எயினர் மரபு, ரணதீர பாண்டியனின் தீரம் என ‘யாத்திசை’ படத்தை வரலாற்று பிரமாண்டமாக படைத்திருப்பார் இயக்குநர் தரணி ராசேந்திரன். அவர் அடுத்து இயக்கும் படத்தில், சோழ இளவல் ‘பொன்னியின் செல்வர்’ ரவி மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை ரவி மோகனே தயாரிக்க இருக்கிறாராம்.
News September 18, 2025
கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS: CM ஸ்டாலின்

திராவிடம் என்றால் என்ன என்று தனக்கு தெரியாது என சொன்னவர், தற்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பதாக EPS-ஐ CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் என்னை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும், கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS-ன் தரத்தை மக்கள் அறிவர் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ரெய்டில் இருந்து தப்பிக்க அதிமுகவை அடகு வைத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.