News May 11, 2024
திருச்சி: ஹோட்டலில் தகராறு செய்த நபர்கள்

பெருகமணியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வேலையில் இருந்தபோது பூபாலன், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேர் உணவு சாப்பிட்டு விட்டு பணம் தராததால் ராஜசேகர் பணம் கேட்டதில் அவர்கள் 3 பேரும் இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் ராஜசேகரை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
Similar News
News July 6, 2025
திருச்சி: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News July 6, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
திருச்சி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி தெற்கு கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் குமார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை வருகிற ஜூலை 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.