News May 11, 2024

பெரம்பலூர் அருகே கார் மோதி பலி!

image

பெரம்பலூர் மாவட்டம் கவர்ப்பனையை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் அங்குள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(மே 9) டூவீலரில் மனைவி ஜெயலட்சுமியுடன் மரவநத்தத்ததிற்க்கு சென்று கொண்டிருந்தார். நெய்க்குப்பை அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சியை மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் நாளை (ஜூலை 8) காலை 9 மணிக்கு தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

News July 8, 2025

பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்!

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரி எண்கள். பெரம்பலூர் எஸ்.பி : 8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9940163631, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9498102682, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498149862, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498166346, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498144724. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்!

News July 8, 2025

பெரம்பலூர்: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை (04328224351) அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!