News May 11, 2024
BREAKING: இன்று கனமழை

இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு (4 மணி வரை) திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்.
Similar News
News September 20, 2025
டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

டீ இல்லாத ஒருநாளை உங்களால் நினைத்துப்பார்க்க முடிகிறதா? ஆனால் 1 மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் ➤பதற்றம் குறையும் ➤டீஹைட்ரேஷன் பிரச்னைகள் குறையும் ➤செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும் ➤செரிமான பிரச்சனை சரியாகும். இந்த சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.
News September 20, 2025
ரோபோ சங்கர் கடைசியாக பேசிய வார்த்தை.. கண்ணீர்

மறைவதற்கு முன்பு ரோபோ சங்கர் கடைசியாக பேசியது குறித்து அவரது அண்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார். எப்போது கேட்டாலும் தூக்கம் வரலைனுதான் சொல்வான். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் என்றாலும் 4 மணிக்கு எந்திரிச்சு, தூக்கமே வரலைனு TV-ய போட்டு உட்காருவான். ஆனால், அன்று ( ஹாஸ்பிடலில் சேர்த்தநாள்) கடைசியா எனக்கு தூக்கம் வருது; நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என சொன்னான்; அதன்பின் பேசவே இல்லை என்று கூறியுள்ளார்.
News September 20, 2025
ஈரானில் அதிக சம்பளத்தில் வேலையா? உஷாரா இருங்க

ஈரான் அல்லது வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை, விசாவும் தேவையில்லை என ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டால் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய அரசு அலர்ட் கொடுத்துள்ளது. இப்படி அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், ஈரானில் இறங்கியதும், கிரிமினல் கேங்குகளால் கடத்தப்பட்டு, பணம் கொடுத்தால் தான் விடுவிப்பேன் என குடும்பத்தாரிடம் மிரட்டும் சம்பவங்கள் நடப்பதாகவும் அரசு எச்சரித்துள்ளது.