News February 18, 2026
மதுரை: கல்லூரி மாணவர் தற்கொலை

கத்தப்பட்டி அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் அய்யாச்சி மகன் சுதீஷ்(19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல், நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததனால் மன உளைச்சல் அடைந்த சுதீஷ் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
*தற்கொலை தீர்வல்ல..! அழையுங்கள் – 104*
Similar News
News April 9, 2026
மதுரை: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 9, 2026
JUST IN: மதுரை மத்திய வேட்பாளர் சுந்தர்.சி மீது பண மோசடி புகார்

‘கலகலப்பு-3′ படத்திற்கு வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுக்காமல் மிரட்டி வருவதாக மதுரை மத்திய அதிமுக கூட்டணி வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் என்பவர் ‘கலகலப்பு-3′ படத்தை குறித்த நேரத்தில் தொடங்காமலும், சம்பள பணத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
News April 9, 2026
மதுரை: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

மதுரை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT


