News May 11, 2024
ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது

பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்கக் கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆவணதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உடனுக்குடன் சரி செய்யத்தக்க பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைகழிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
உதயசூரியன், இரட்டை இலையால் பறிபோன கட்சிகள்

6 ஆண்டுகளாக தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை EC ரத்து செய்துள்ளது. திமுகவின் உதயசூரியன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளான ஈஸ்வரனின் கொமதேக, ஜவாஹிருல்லாவின் மமக, தமிமுன் அன்சாரியின் மஜக, ஜான்பாண்டியனின் தமமுக அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் இவர்களின் நிலைபாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News September 20, 2025
RECIPE: சுவையான, ஹெல்தியான கம்பு கட்லட்!

கம்பு & உருளைக்கிழங்கை ஒன்றாக வேகவைத்து, பின்னர் மசித்துக் கொள்ளவும் *இவற்றுடன் துருவிய கேரட் & காலிஃபிளவரை சேர்த்து தண்ணீர் விட்டு, 10 நிமிடங்கள் வேக வைக்கவும் *இதில், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா & உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும் *இந்தக் கலவையை கட்லெட் வடிவில் தட்டி, எண்ணெய்யில் பொறித்தெடுத்தால், சுவையான கம்பு கட்லட் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 20, 2025
ஜம்முவில் சிக்கிய 4 பயங்கரவாதிகள்

JK-வின் உதம்பூரில் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயற்சித்தனர். இதனால், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 4 பேரை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.