News February 17, 2026

சிவராத்திரி விழாவில் முப்படை அதிகாரிகள் எதற்கு?

image

கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் பங்கேற்றது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என CPI வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். மேலும், முப்படை அதிகாரிகள் சீருடையுடன் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டது கண்டனத்திற்குரியது எனவும் சாடியுள்ளார். மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News March 7, 2026

T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

image

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.

News March 7, 2026

மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

image

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.

News March 7, 2026

மீண்டும் கூட்டணி அறிவிப்புக்கு நாள் குறித்த ராமதாஸ்

image

TN-ல் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டுக்கு சென்றுவிட்டனர். ஆனால், ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. மகளிர் தின வாழ்த்து கூறிய ராமதாஸிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இன்னும் 12 நாள்களில் கூட்டணி அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். ஏற்கெனவே 2 முறை தேதி குறித்தும் கூட்டணி அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!