News May 11, 2024

சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து

image

சிவகாசி அருகே நாரணாபுரம்புதூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன மூலப்பொருள் சேமித்து வைத்திருந்த கிடங்கு வெடித்துச் சிதறியதில், 3 அறைகள் தரைமட்டமானது. அதிகாலையில் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கீழதிருத்தங்கலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த 2 நாட்களில், மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 21, 2025

இந்த ஒரு மீன் போதும்.. ஹார்ட் அட்டாக்கே வராது

image

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் சர்வசாதாரணமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. இதனை தடுக்க சால்மன் வகை மீன்களை சாப்பிடலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மீன்களில் அதிகமாக ஒமேகா 3, புரதம், வைட்டமின் டி, பி12, செலினியம் இருப்பதால் இதய பிரச்னைகள் வரும் அபாயம் குறைக்கிறதாம். எனவே Red Meat-க்கு பதிலாக இவ்வகை மீன்களை உண்ணலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.

News September 21, 2025

விஜய் குற்றச்சாட்டு: ஒப்புக்கொண்ட திமுக MLA

image

நெல் கொள்முதலில், 40 கிலோ மூட்டைக்கு ₹40 கமிஷன் வாங்குவதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இவ்வளவு வாங்குவதில்லை, சும்மா ஏதோ வாங்குறாங்க, நான் இல்லைன்னு சொல்லல என்று திருவாரூர் திமுக MLA பூண்டி கலைவாணன் ஓபனாக கூறியுள்ளார். இந்த பணமும் விவசாயிகள் விருப்பப்பட்டு தருவதுதானே தவிர, கட்டாயம் அல்ல என்றும், லோடு மேன் கமிஷன் வாங்குவதற்கும் முதல்வருக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

ஈழ விவகாரத்தில் விஜய்யின் நிலைபாடு என்ன?

image

தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை என்ற ஒற்றை வரியை மட்டும் நேற்று விஜய் குறிப்பிட்டார். ஈழ விவகாரத்தில் காங்., செயல்பாடுகள் குறித்து விஜய் இதுவரை பேசவில்லை. ஒரு நடிகராக ஈழ போராட்டத்தில் பங்கெடுத்த அவர், அரசியல் கட்சி தலைவராக ஈழ விவகாரத்தை தீவிரமாக பேசவில்லை. இதனால், அவ்விவகாரத்தை தவிர்க்கிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!