News February 16, 2026

சேலம் மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகர பகுதியில் உள்ள பொது மக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியை, நிகழ்ச்சி நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 18, 2026

சேலம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 18, 2026

சேலம்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 18, 2026

BREAKING: சேலத்தில் இளம்பெண் தற்கொலை

image

சேலத்தைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர், கௌதம் என்பவரை காதலித்து வந்தார். பின், கௌதமின் நடத்தை சரியில்லாத காரணத்தால் சண்முகபிரியா அவருடன் பழகுவதை துண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கௌதம், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சண்முகபிரியா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!