News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் இளைஞர் துடி துடித்து பலி!

சின்னசேலம் அருகே வான கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (37). இவர் திருமணமானவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் இன்று மதியம் தன் நண்பர் குமாரை பார்க்க நடேசன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் பைப்லைன் வேலை செய்து கொண்டிருந்த குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
கள்ளக்குறிச்சியில் EB பில் எகிறுதா..?

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 18, 2026
கள்ளக்குறிச்சி: மனைவியை கத்தியால் கிழித்த கணவர்

கள்ளக்குறிச்சி, பீளமேட்டை சேர்ந்தவர் அப்துல்ஜப்பார் (50), அவரது மனைவி பாத்திமா (45) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பாத்திமா கணவரை பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமாவை அப்துல்ஜப்பார் ஆபாசமாக திட்டி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அப்துல்ஜப்பார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
News February 18, 2026
கள்ளக்குறிச்சி: சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

சின்னசேலம், அம்மையகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மகன் விக்னேஷ் (26), இவரும் தியாக துருகம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நல அலுவலர் குப்புவள்ளி விசாரித்தபோது, தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


