News May 10, 2024

பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் சாதனை!!

image

நல்லம்பள்ளி மானியத அள்ளி ஊராட்சி ஜருகு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மேல் பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் S.பிரதீப் குமார் 484 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்தார். மேலும் பூரிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் +12, 10, பொது தேர்வில் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 14, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஆக.13) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

வேலைவாய்ப்பு கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர்

image

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர்ரெ.சதீஸ்,இன்று (13.08.2028) பார்வையிட்டார்கள். உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 13, 2025

புனித பயணம் செல்ல மானியம் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் செல்ல நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!