News February 14, 2026

மதுரை: ரவுடி தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்..!

image

மதுரை, சமயநல்லூர் அருகே அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ரவுடி பிசிறு என்ற பிரபு(31) நேற்று முன்தினம்(பிப்.12) அவரது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு மீது கொலை, கூட்டு பாலியல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமயநல்லூர் போலீசார் விசாரணையில் இரவு மது அருந்த பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மனைவி பணம் தர மறுத்ததால் தற்கொலை செய்துள்ளார்.

Similar News

News February 18, 2026

மதுரை: கல்லூரி மாணவர் தற்கொலை

image

கத்தப்பட்டி அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் அய்யாச்சி மகன் சுதீஷ்(19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல், நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததனால் மன உளைச்சல் அடைந்த சுதீஷ் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

*தற்கொலை தீர்வல்ல..! அழையுங்கள் – 104*

News February 18, 2026

மதுரையில் நிலம் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <>கிளிக் <<>>செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News February 18, 2026

மதுரை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பெற வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!