News May 10, 2024
மே 14ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 11ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி 10 மாவட்டங்களிலும், மே 14ஆம் தேதி 8 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
Oxygen உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது?

நாம் சுவாசிக்கும் 50% ஆக்சிஜன் கடலில் இருந்து கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடலில் உள்ள பிளாங்க்டன் எனப்படும் சிறிய தாவரங்கள், சைனோபாக்டீரியா, ஆல்கி மற்றும் சில பாக்டீரியாக்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதைதான் கடலில் வாழும் உயிரினங்களும் சுவாசிக்கின்றன. நிறைய பேர் மரத்திலிருந்து மட்டுமே ஆக்சிஜன் கிடைப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறனர். அனைவரும் இத்தகவலை தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News October 25, 2025
டாஸ்மாக்கில் மட்டும் அக்கறை காட்டுவதா? நயினார்

தஞ்சை நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், இதற்கு TN அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயித்து மதுபாட்டில் விற்ற அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை என்றும் விமர்சித்தார்.
News October 25, 2025
Sports Roundup: கால்பந்தில் இந்தியா வெற்றி

*ஆசிய யூத் கேம்ஸ் கபடியில், தங்கம் வென்ற ஆடவர், மகளிர் அணியினருக்கு தலா ₹2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு. *இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தேவிகா சிஹாக் முன்னேற்றம். *பிறப்பு சான்றிதழ் மோசடி காரணமாக மல்யுத்த வீரர் சஞ்சீவை இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது. * நட்புறவு கால்பந்தில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது.


