News May 10, 2024

ஆழ்கடலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விருந்தோம்பல்

image

கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென் நார்வேயின் வடக்கு கடலுக்குள் 5 மீட்டர் ஆழத்தில் ‘அண்டர்’ என்ற மிகப்பெரிய ஆழ்கடல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அந்த உணவகத்தில், 18 வகையான கடல் உணவு & மதுபானம் அடங்கிய ஒரு காம்போவின் விலை ₹30 ஆயிரமாம்.

Similar News

News August 19, 2025

பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து

image

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News August 19, 2025

NDA கூட்டணி கட்சிகள் ஆலோசனை

image

டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.

News August 19, 2025

கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு.. இன்று விசாரணை

image

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

error: Content is protected !!