News February 14, 2026
திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மணப்பாறையை அடுத்த வெள்ளபூலாம்பட்டியில் உள்ள நியாயவிலைக்கடை வளாகத்தில் பிப்.14ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுவதில் இப்பகுதி மக்கள் கலந்து கொண்டு, தங்களின் ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை, மனுவாக அளித்து பயன்பெறலாம் என திருச்சி கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
திருச்சி: ஆதார் முகாம் குறித்த அறிவிப்பு

திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர் dotiruchirappalli.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
திருச்சி: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல், சோளம், எள் பயிருக்கு பிரீமியம் தொகை செலுத்த வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களில் காப்பீட்டுத் தொகையை செலுத்தி பயனடையுமாறு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
திருச்சி: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!


