News May 10, 2024
மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது வழங்கியுள்ளன

பிரதமர் மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் மோடியை மதிப்பதாகவும், 5 அரேபிய முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்துள்ளதாகவும், இதுபோல் அந்நாடுகள் வேறு எந்த தலைவருக்கும் விருது அளித்ததில்லை என்றும் கூறினார்.
Similar News
News November 4, 2025
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை: மாணவர்கள் குஷி

தேர்தலையொட்டி இந்தாண்டு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறவுள்ளன. அந்த வகையில், மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும். +2 தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவதால், 2 மாதங்களுக்கும் மேல் லீவுதான். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.6-ல் கடைசி தேர்வு நடைபெற இருப்பதால், ஜூன் வரை அவர்களுக்கும் விடுமுறையே. மற்ற வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.
News November 4, 2025
1% பணக்காரர்களின் சொத்து 62% ஆக உயர்வு

இந்திய மக்கள் தொகையில் 1% உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 23 ஆண்டுகளில் 62%ஆக உயர்ந்துள்ளதாக ஜி20 அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சீனாவில் 54% ஆக உள்ளது. மேலும், உலகளவில் உள்ள 1% பெரும் பணக்காரர்கள், கடந்த 23 ஆண்டுகளில் 41% புதிய சொத்துக்களை சேர்த்துள்ளனர். அதேசமயத்தில், உலகின் பாதி மக்கள் வெறும் 1% மட்டுமே சொத்துக்களை சேர்த்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?
News November 4, 2025
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


