News May 10, 2024
தங்கம் விலை ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்வு

அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்ந்துள்ளது. காலையில், முதலில் சவரனுக்கு ₹360 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2ஆவது முறையாக மீண்டும் ₹360 அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 3ஆவது முறையாக ₹520 உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் 1 சவரன் தங்கம் விலை ₹54,160ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் ₹1,240 உயர்ந்துள்ளது.
Similar News
News September 23, 2025
இரவா? பகலா?

நார்வே நாட்டில் உள்ள சோமரோய் என்னும் சிறிய தீவில் ஒவ்வொரு கோடை காலங்களில் 69 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை (Midnight Sun). குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதில்லை (Polar Night). இந்த ஊரில் கடிகாரம் இல்லை. இங்கு வாழும் மக்களுக்கு நேரம் ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு இந்த தீவில் வாழ ஆசையா இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
ரசிகர்களின் காத்திருப்பை அதிகரித்த சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், ‘கருப்பு’ படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், இந்த ஆண்டு வர வாய்ப்பில்லை. அடுத்தாண்டு பொங்கலுக்கு ஏற்கெனவே ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் சூர்யாவின் கருப்பு படம் 2026 ஏப்ரலில்தான் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News September 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.